யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமராட்சியில் , வல்வெட்டித்துறை , தொண்டமானாறு , கெருடாவில் தெற்கு, ஆகிய உள்ளூராட்சி வட்டாரங்களில் , தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, புதிய வட்டார சபையின் செயற்பாடுகளுக்கு தங்களது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர்.

What’s your Reaction?

