செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு மாவட்ட காணி மதிப்பில் தொடரும் ஏற்றம்..!

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த வளர்ச்சியானது, காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் உப சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று உப சுட்டெண்களிலும் பிரதிபலித்துள்ளதுடன், அவை முறையே 12.4%, 11.3% மற்றும் 8.0% வருடாந்த அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில், காணி மதிப்பீட்டுச் சுட்டெண் மற்றும் அதன் உப சுட்டெண்கள் அரையாண்டு அடிப்படையில் மிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.

இதில் வர்த்தக மற்றும் வதிவிட உப சுட்டெண்கள் உயர்ந்த வளர்ச்சி வேகத்தைக் காட்டியுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்