வணிகம்

அக்டோபரில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்தது

  • Nov 3, 2025 - 11:24 PM
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான ஒரு முக்கிய அடையாளமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் 29 வரை மொத்தம் 1,53,063 சுற்றுலாப் பயணிகள் இலங்கையைப் பார்வையிட்டுள்ளனர். இதில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக விளங்குகிறது. அந்த காலப்பகுதியில் 44,741 இந்தியர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இது மொத்த வருகைகளில் 29.2 சதவீதம் […]

உலகம்

திருமணச் செலவுக்கு திருமண ஆடையில் விளம்பரத்திற்கு இடம் ஒதுக்கிய தொழிலதிபரின் புதுமை

  • Nov 3, 2025 - 11:18 PM
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் டகோபெர்ட் ரெனூப் தனது திருமணச் செலவுகளைச் சந்திக்க வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் — தனது திருமண உடையான டக்ஸிடோவில் விளம்பர இடத்தை விற்று! ரெனூப் கடந்த ஜூலையில் தனது திட்டத்தை அறிவித்தார். திருமணத்தை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றிய அவரது யோசனை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இத்திட்டத்தில் 26 தொடக்க நிறுவனங்கள் (Startups) கலந்து கொண்டு அவரது திருமணத்திற்கு நிதி உதவி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வித்தியாசமான முயற்சி […]

இந்தியா

இந்தியாவில் பேருந்துடன் மோதிய லாரி – 16 பேர் பலி, 8 பேர் காயம்

  • Nov 3, 2025 - 11:12 PM
  • 0 Comments

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். கிராவல் கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பொதுப் போக்குவரத்து பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேவெல்லா அருகே ஏற்பட்ட இந்த மோதலில், லாரியில் இருந்த கிராவல் கற்கள் பேருந்தின் மேல் சரிந்தன. இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. “இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; எட்டு பேர் காயமடைந்துள்ளனர்,” […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு காரணங்களால் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

  • Nov 3, 2025 - 11:07 PM
  • 0 Comments

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரச தலைவர்கள் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டாலும், அது நடைமுறைப்படுவதற்கான நம்பிக்கை இன்னும் தெளிவாக இல்லை. எனினும் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு காரணங்களால் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. தற்போதைய ஆட்சிக் கட்சிக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் ஆற்றல் (NPP) கட்சியின் வாக்குகள் கணிசமாக குறைந்ததால், எதிர்காலத் தேர்தல்களில் […]

கட்டுரை

இறக்குமதி செய்யப்பட்ட நோய்த்தொற்றுகள்

  • Nov 3, 2025 - 10:57 PM
  • 0 Comments

இலங்கையின் மலேரியா ஒழிப்பு வெற்றிக்கு மீண்டும் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆபிரிக்கா, இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் மலேரியா நோய் மீண்டும் நாட்டுக்குள் நுழைய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பயணங்கள் வழியே மலேரியா பரவல் இலங்கையில் தற்போது பதிவாகும் புதிய மலேரியா நோய்களில் சுமார் 90% ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களுடனும், மீதமுள்ளவை இந்தியாவிற்கான தீர்த்த யாத்திரைகள் மற்றும் தொழில்சார் பயணங்களுடனும் தொடர்புடையவையாகும். ஒரு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளையன் உட்பட 6 பேர் கைது, தங்கசங்கிலிகள் மீட்பு

  • Nov 3, 2025 - 10:46 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவத்துடன் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலதிக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Nov 3, 2025 - 10:34 PM
  • 0 Comments

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது நிகழ்ந்தது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள நான்கு பேர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பதவி உயர்வு வழங்கப்படவில்லையென அழுது வடியும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

  • Nov 3, 2025 - 10:25 PM
  • 0 Comments

மேல் நீதிமன்றங்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நான்கு வெற்றிடங்களில் நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அழுது வடிகிறார் எனக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குமுறுகின்றார் லண்டனில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்ச்சியில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா பல்கலைகழக மாணவன் மர்ம மரணம்.உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைப்பு

  • Nov 3, 2025 - 10:15 PM
  • 0 Comments

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய நீண்ட நேர மது விருந்து நடைபெற்றது. சனிக்கிழமை காலை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். மாணவரின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்

  • Nov 3, 2025 - 06:40 PM
  • 0 Comments

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பு மேம்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் கடந்தது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோர் கடற்றொழில் அமைச்சில் சந்தித்து, நட்பு மற்றும் பணிசார்ந்த விவாதங்களை நடத்தினர். சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் மீன்வளத் துறைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் அறிவு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp