இந்தியா

இந்தியாவில் பேருந்துடன் மோதிய லாரி – 16 பேர் பலி, 8 பேர் காயம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

கிராவல் கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பொதுப் போக்குவரத்து பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேவெல்லா அருகே ஏற்பட்ட இந்த மோதலில், லாரியில் இருந்த கிராவல் கற்கள் பேருந்தின் மேல் சரிந்தன. இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.

“இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; எட்டு பேர் காயமடைந்துள்ளனர்,” என ஒரு பொலிஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேருந்தில் சிக்கிய பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(மூலம்: NDTV)

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது