உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டிட்வா தாக்கம் – அத்தியாவசிய சேவைகள் நீடிக்கப்பட்ட வர்த்தமானி வெளியீடு.

  • Jan 31, 2026 - 11:23 AM
  • 0 Comments

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முன்னிட்டு, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதுடன், ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள்;, குடிநீர் வழங்கல், உணவுச் சேவைகள், மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள், பிரதேசச் செயலாளர் அலுவலகங்கள் மற்றும் கள அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி, அரச […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண்டாட்டி மாருக்காக உலக அழகி போட்டியில் இலங்கை பெண் மகுடம் சூட்டினார்.

  • Jan 30, 2026 - 06:14 PM
  • 0 Comments

மிஸ் இன்டர்கொண்டினென்டல் 2025 உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நேற்று (29) எகிப்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மிஸ் இன்டர்கொண்டினென்டல் இலங்கை ஹன்சனா பலசூரியா சிறப்பு விருதொன்றை வென்று கவனம் ஈர்த்தார். அவருக்கு “Strength and Harmony” எனப்படும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது. பாடல் பாடும் திறமை, ஓவியக்கலை திறன் மற்றும் கராத்தே விளையாட்டில் மூன்று முறை கருப்பு பட்டம் பெற்றுள்ள சாதனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொலிஸில் 32,000 வெற்றிடங்கள் – பாதுகாப்புக்கு பெரும் சவால்!

  • Jan 30, 2026 - 06:07 PM
  • 0 Comments

இலங்கைப் பொலிஸில் சுமார் 32,000 வெற்றிடங்கள் நிலவி வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பொலிஸ் துறை தேவையான மனிதவள அளவைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இன்றைய தினம் (30) காலை குற்றப்புலனாய்வு துறையுடன் இணைக்கப்பட்ட கைரேகை அதிகாரிகள், குற்ற பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் நீதிமரபியல் புகைப்படக்காரர்களின் குற்ற விசாரணைகளில் வழங்கிய பங்களிப்பை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவின் உறவில் ஈடுபட்ட இளம் ஜோடிக்கு 140 கசை அடி யுவதி மயங்கினார்.

  • Jan 30, 2026 - 05:57 PM
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், ஷரியா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவும் மதுபானம் அருந்தியதற்கும் ஒரு இளம் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 140 கசை அடி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 21 வயதுடைய பெண் தண்டனை வழங்கும் போது மயங்கியதால், பெண் அதிகாரிகள் அவரை ஆம்புலன்சில் அனுப்பினர். அதே நாளில், இஸ்லாமிய மதப் பொலிஸ் படை அதிகாரி ஒருவர் உட்பட மேலும் நால்வரும் ஷரியா சட்ட மீறலில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குறிப்பாக, அந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாற்றுதிறனாளி மாணவியை வற்புனர்ந்த யாழப்பாணத்தவர் இஸ்ரேலில் கைது.

  • Jan 30, 2026 - 05:42 PM
  • 0 Comments

விசேட தேவைகுட்பட்ட பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த சந்தேக நபர் 2025 மே மாதத்தில் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் சென்றதாகவும், தனது அதிகாரப்பூர்வ வேலைத் துறைக்கு வெளியே தற்காலிக பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலில் அமைந்துள்ள பெத் ஷெமேஷ் பொலிஸ் நிலையத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, இன்டர்போலின் இஸ்ரேல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

545 பாலியல் தொல்லை,38 வல்லுறவு சம்பவங்கள்.20 குழந்தைகள் உயிர் மாய்ப்பு முயற்சி

  • Jan 30, 2026 - 08:04 AM
  • 0 Comments

நாட்டில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இதில் 8,514 முறைப்பாடுகள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பரிசீலனையில் உள்ளதாகவும், 1,941 சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறைப்பாடுகளில் 545 பாலியல் தொல்லை சம்பவங்கள், 231 கடுமையான பாலியல் தவறுகள், 38 வல்லுறவு சம்பவங்கள், 9 சிறுவர் திருமணங்கள், மற்றும் 150 இணையத் தொல்லை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிறுவர்கள் பாடசாலைக்கே செல்ல வேண்டும், வேலைக்கு அல்ல- அரசு நடவடிக்கை

  • Jan 30, 2026 - 07:22 AM
  • 0 Comments

இலங்கையில் சிறுவர் தொழிலாளர் பிரச்சினையை முற்றிலும் ஒழிக்க தொழிலாளர் அமைச்சு பல புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது என தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு தேசிய வழிகாட்டுக் குழுவின் முதல் கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. சிறுவர் தொழிலாளர் நிலைமை குறித்து இதுவரை நாடு முழுவதையும் உள்ளடக்கிய முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாத நிலையில், சில பகுதிகளில் மட்டுமே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வளங்களின் பற்றாக்குறை காரணமாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

RTI தகவல் தடை உயர்வு இல்லை- ஆணைக்குழு மறுப்பு

  • Jan 30, 2026 - 07:02 AM
  • 0 Comments

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு நிறுவனங்கள் தகவல் வழங்க மறுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் இல்லை என தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் இயக்குநர் நாயகம் கே.டி.எஸ். ருவஞ்சந்திர, தகவல் கோரிக்கைகளை அரசுத் துறைகள் மறுக்கும் நிலை முன்பிருந்தே காணப்பட்ட ஒன்றே தவிர புதியதாக உருவான போக்கு அல்ல என்றும், அண்மைக்காலத்தில் அதில் மாற்றம் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறினார். ஆணைக்குழுவிற்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாண தேர்தல் முடங்கிய ஜனாதிபதியின் அதிகார மௌனம்

  • Jan 30, 2026 - 06:48 AM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழு பலமுறை ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான சிக்கல் காரணமாகவே இந்தத் தேர்தலை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக அவர் கூறினார். தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத வரை ஆணைக்குழுவால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தெளிவும் நடவடிக்கையும் கோரி சுமார் நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதையும், அதற்கு இதுவரை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டிக்டொக் நட்பு மோசடி: மயக்க மருந்து கொடுத்து கொள்ளை — சந்தேகநபர் கைது

  • Jan 29, 2026 - 02:41 PM
  • 0 Comments

டிக்டொக் வழியாக பழகியவர்களை மயக்க மருந்து கொடுத்து பணமும் தங்க நகைகளும் அபகரித்ததாகக் குற்றச்சாட்டில் 28 வயதுடைய ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொரளஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தகவலின்படி, சந்தேகநபர் டிக்டொக் மூலம் தனியார் வங்கிப் பணியாளருடன் நட்பு ஏற்படுத்தி, கடந்த 19ஆம் தேதி கொழும்பிலுள்ள பெரிய வணிக வளாகம் ஒன்றில் உள்ள உணவகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். அங்கு, பாதிக்கப்பட்ட நபருக்கு தெரியாமல் மயக்க மாத்திரைகளை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp