உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மருத்துவப் பணிப் புறக்கணிப்பு: முடங்கும் மருத்துவமனைகள்

  • Feb 2, 2026 - 08:23 AM
  • 0 Comments

இலங்கையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரமாக்கும் என்று எச்சரித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் தற்காலிக கடமைகள் அல்லது பதிலீட்டு கடமைகள் வழங்குவதை வாபஸ் பெறுகின்றனர். தற்காலிக கடமைகளுக்காக மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவு சம்பளம் பெறுவதாக இருந்தாலும், இதுவரை சம்பளம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஹன்சமால் வீரசுரிய கவலை வெளயிட்டுள்ளார் இதற்கிடையில், தீவிரமாக மருத்துவ நிபுணர்கள் குறைவு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தரமற்ற நிலக்கரிக்கு எதிராக எதிர்கட்சி போர்கொடி

  • Feb 2, 2026 - 08:19 AM
  • 0 Comments

மின்சாரம் உற்பத்திக்காக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி உள்நிலை ஆலோசனைகள் நடத்தி வருவதாக கூறினார். அரசாங்கம் கேள்வி கோரல் நடைமுறையில் எந்தப் பிழையும் இல்லை என வலியுறுத்தினாலும், மூன்று முக்கிய குறைபாடுகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை சீருடையில் வேலைக்கு செல்லும் சிறார்கள். ஆய்வில் அதிர்ச்சி

  • Feb 2, 2026 - 07:44 AM
  • 0 Comments

இலங்கையில் 18 வயதிற்குக் குறைவான சில குழந்தைகள் சட்டவிரோத குழந்தைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தொழில் அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, பாடசாலை சீருடை அணிந்தபடியே வேலைக்குச் செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது சந்தேகத்திலிருந்து தப்பிக்கவும், பாடசாலையிருந்து வீடு திரும்புவதாக தோற்றமளிக்கவும் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ இதுகுறித்து தெரிவித்ததாவது, பொருளாதார சிரமங்கள் காரணமாக சில குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை விடுத்து வருமானம் ஈட்டும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டிய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நியூட்டனின் 3ம்; விதியை முன்கூட்டியே தெரிவித்தது வள்ளுவர் என வடக்கு ஆளுநர் புகழாரம்.

  • Feb 1, 2026 - 05:00 PM
  • 0 Comments

மனித வாழ்வியல் நெறிகளை முற்றிலும் எடுத்துரைக்கும் திருக்குறள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார் குறிப்பாக, ஐசக் நியூட்டனின் மூன்றாம் விதியை திருவள்ளுவர் பல நூற்றாண்டுகள் முன்பு குறளின் மூலம் விளக்கியுள்ளார்: ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ எனச் சொல்வது, ஒருவரின் செயல் எதிர்பலத்தை அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசு திட்டம் நிராகரிப்பு: வர்த்தகர்கள் போராட்டம்

  • Feb 1, 2026 - 04:40 PM
  • 0 Comments

பொருளாதார மையங்களின் நிர்வாகத்தை புதிதாக நிறுவப்பட்ட அரச நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தம்புள்ளை பொருளாதார மையத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே வர்த்தக உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவித்தனர். வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தம்புள்ளை பொருளாதார மைய வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இரவு வேலை பெண்களுக்கு பாதுகாப்பு கட்டாயம்

  • Feb 1, 2026 - 04:22 PM
  • 0 Comments

பெண்கள் இரவு பணியில் ஈடுபடுவது தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண் சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் உணவுச் சேவைத் துறையில் பணிபுரியும் பெண்கள் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணியாற்றுவது தொடர்பாக இந்த ஒழுங்குகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவிப்பு தொழிலாளர் அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்கள் இரவு பணியில் ஈடுபடும் நேரங்களில் அல்லது பணி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய வரவுசெலவு திட்டத்தால் இலங்கை பெரும் ஆதாயம்

  • Feb 1, 2026 - 04:12 PM
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 13வது வரவுசெலவுத் திட்டம் இன்று காலை இந்திய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு 3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது அண்டை நாடுகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்காக 3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளை பூடானுக்கு 20.68 பில்லியன் ரூபாயும் நேபாளுக்கு 7 பில்லியன் இந்தியன் ரூபாயும் மாலத்தீவுக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வரவு செலவு திட்டத்தைநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாவலி அதிகாரசபையால் குடியிருப்புகளை அகற்றம் முடியும் குடியேற்றவும் முடியும்- அரசாங்கம்.

  • Feb 1, 2026 - 02:26 PM
  • 0 Comments

நாட்டின் பாசன அமைப்புகளை பாதுகாப்பதற்காக நீர்த்தேக்கக் குளங்களின் பாதுகாப்பு நிலப்பரப்புகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படும் என விவசாய, கால்நடை, காணி; மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். எதிர்ப்புகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்த நடவடிக்கைகள் பின்வாங்கப்படமாட்டாது என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார். உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ‘காலநிலை புத்திசாலித்தனமான நீர்ப்பாசன விவசாய திட்டம்’ கீழ் ‘கேஸ்கேட்’ முகாமைத்து குழு கையேடு அறிமுக நிகழ்வில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை மறுசீரமைப்பு நிதியத்தை முறைப்படுத்த புதிய சட்டம் – அரசாங்கம் துரித நடவடிக்கை

  • Feb 1, 2026 - 07:17 AM
  • 0 Comments

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் கிடைக்கப்பெறும் பில்லியன் கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பதற்கும் முறைப்படுத்துவதற்குமாக ‘ஸ்ரீலங்கா மறுசீரமைப்பு நிதியத்தை’ முறையாக நிறுவுவதற்கான புதிய நாடாளுமன்றச் சட்டமூலம் ஒன்றினை அரசாங்கம் தற்போது வரைந்து வருகின்றது. இந்த நிதியத்திற்கு ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட விசேட இடைக்கால பொறிமுறையின் கீழ், திறைசேரியின் பிரத்யேகக் கணக்குகளின் ஊடாக இந்த நிதியம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு: மக்களுக்கு நிம்மதி

  • Feb 1, 2026 - 06:44 AM
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமலில் வந்துள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 277 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 292 ரூபாவாக ஆக மாற்றப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp