உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா தலைமை, ஈழத் மக்கள் நம்பிக்கை

  • Feb 6, 2026 - 07:50 AM
  • 0 Comments

ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கவும், தமிழினப் படுகொலைக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கடிதம் எழுதிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வல்வெட்டித்துறை நகர சபை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஈழத் தமிழ் மக்களின் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்ட அமெரிக்கா தலைமைத்துவப் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அதிகாரபூர்வ அழைப்பு: இந்தியாவின் பிடியில் ஜே.வி.பி குழு

  • Feb 6, 2026 - 07:45 AM
  • 0 Comments

ஜேவிபி கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இந்தியா சென்ற தூதுக்குழுவில் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்; கருணைநாதன் இளங்குமரன் இடம் பெற்றுள்ளார். இந்த தூதுக்குழுவானது, இந்திய கலாசார உறவுகள் பேரவையின்; (உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நேற்று இந்தியாவின் நியூடெல்லிக்குச் பயணம் மேற்கொண்டது. இந்த விஜயத்தின் போது, டில்வின் சில்வா மற்றும் அவருடன் இணைந்துள்ள குழுவினர் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அத்துடன், அந்த மாநிலங்களின் முதல்வர்களுடன் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லஞ்ச ஊழல் புகார்: அதிரும் சபாநாயகர் செயலகம்

  • Feb 6, 2026 - 07:42 AM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான சட்டத்தரணி சாமிந்த குலரத்தின இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்படும் நிலையில், நிர்வாக ரீதியான கடுமையான சர்ச்சை நிலவுவதாக தெரியவருகின்றது. அரசின் வளங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சாமிந்த குலரத்தின சபாநாயகருக்கு எதிராக லஞ்சம், மற்றுமு; ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்ததிலிருந்து 24 மணி நேரத்துக்குப் பின்னர், சபாநாயகர் அலுவலகத்திலிருந்து பாராளுமன்ற பொதுச் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டுபாய் மோதல்: இலங்கையில் பழிவாங்கத் திட்டம்?

  • Feb 6, 2026 - 07:39 AM
  • 0 Comments

சமூக ஊடகங்களில் கடந்த முதலாம் திகதியன்று பரவிய ஒரு ஒலி பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள உள்ளூர் போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள், இலங்கையில் உள்ள தங்களது சகாக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குமாறு அறிவுறுத்தியதாக அந்த பதிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 22 நிமிடங்கள் நீளமான இந்த குழு தொலைபேசி உரையாடலில், ரஸல் ஸ்மித், பிரெஞ்ச் ரூபன், இங்கிலாந்தைச் சேர்ந்த குடு லால் மற்றும் வெல்லே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசிய பெண்கள் ஆணைக்குழு: வெறும் கனவா? அல்லது அரசியல் நாடகமா?

  • Feb 5, 2026 - 08:41 AM
  • 0 Comments

தேசிய பெண்கள் ஆணைக்குழு நடப்பு காலப்பகுதியில் செயல்படாமையால் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றம் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி சாமிந்த்ராணி கிரியெல்ல, பெண்கள் உரிமைகள் முன்னேற்றம் தொடர்பான வலுவான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆணைக்குழுவை செயல்படுத்தாதது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். 2026 வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இல்லாததும், ஆணைக்குழுவின் முதல் தலைவர் ரமணி ஜயசுந்தரன் பதவி விலகியதும், ஆணைக்குழுpவின் சுயாதீனம் மற்றும் செயல்திறன் குறைந்ததை காட்டுகின்றன. ஜனாதிபதி செயலாளருடன் சந்திப்பினை கோரிய முன்னாள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நச்சு நிலக்கரி: நுரைச்சோலை காற்றில் கலக்கும் மரணப் புழுதி!

  • Feb 5, 2026 - 08:37 AM
  • 0 Comments

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தில் தரநிலைகளை பூர்த்தி செய்யாத நிலக்கரி பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பயன்படுத்தப்பட்ட நிலக்கரியின் கந்தகச் சத்து தொடர்பாகவே முக்கிய கவலைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்துடன் கலந்துரையாடப்பட வேண்டியதாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார் இதற்கிடையில், மின்சார […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கம் பிரதமர் கருத்தை மறுத்தது

  • Feb 5, 2026 - 08:31 AM
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகமான ஆறாம் வகுப்பு பாடத் தொகுதிகள் அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை என்ற பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரியாவின் நாடாளுமன்றக் கருத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் மறுத்துள்ளது. குறிப்பாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ஆறாம் வகுப்பு ஆங்கில மொழி தொகுதியின் தயாரிப்பு மற்றும் அச்சிடுதலுக்கே சுமார் 65 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரச்சினை உள்ள பகுதிகளை நீக்கி மீதியை பயன்படுத்தினாலும் அது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் பற்றாக்குறை: அரசுப் பள்ளிகளில் கல்விப் பின்னடைவு

  • Feb 5, 2026 - 08:22 AM
  • 0 Comments

நாடெங்கும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில்; 10 ஆசிரியர்களுக்கும் குறைவாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறை தகவல்கள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 10,047 பாடசாலைகள் உள்ளன. இதில் 3,065 பாடசாலைகளில் ஆசிரியர் எண்ணிக்கை 10-க்குக் குறைவாக இருக்கிறது, அவற்றில் ஒரு பாடசாலை தேசியப் பாடசாலையாகும். மேலும், 1,645 அரசுப் பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை 50-க்கு குறைவாக உள்ளது. இந்தப் பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலை மற்றும் 1,644 மாகாணப் […]

உள்ளூர் செய்திகள் விளையாட்டு

பெத்தெல் சூப்பர் பந்துவீச்சு, இலங்கை தோல்வி

  • Feb 4, 2026 - 07:50 AM
  • 0 Comments

இங்கிலாந்து அணி இலங்கை அணியை மூன்றாவது டி.20 போட்டியிலும் 12 ஓட்டங்களால் தோற்கடித்து, மூன்று போட்டிகளும் உள்ள தொடரில் 3–0 என்ற வெற்றியை பதிவு செய்துள்ளது. பல்லேகலையில் நேற்று இரவு (மார்ச் 3) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைச் சேர்த்தது. இதில் சேம் கரன் 58 ஓட்டங்களை அடைந்தார். இலங்கை அணி பதிலுக்கு 129 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய கடற்படை இலங்கை மீனர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்- கடற்றொழில் அமைச்சு

  • Feb 4, 2026 - 07:10 AM
  • 0 Comments

இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மீனவர்கள் மீது மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை மீனவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் வென்னப்புவை, வெள்ளமங்கரய மீன்வள துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்ட இரண்டு மீன்பிடி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp