ஈழம் உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை கடற்படையால் கட்டைக்காட்டில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல்..!

  • Feb 19, 2026 - 09:38 AM
  • 0 Comments

சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நேற்று(18.02.2026) மாலை 04.00மணியளவில் ஆரம்பமாகியது. சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (18.02.1994) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. குறித்த நினைவேந்தலில் முதல் நிகழ்வாக படுகொலையை நினைவுகூரும் விதமாக […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை..!

  • Feb 18, 2026 - 12:37 PM
  • 0 Comments

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கென தனியானதொரு […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் ஏற்கோம்..!

  • Feb 18, 2026 - 12:35 PM
  • 0 Comments

ரவிகரன் விடாப்பிடி மகாவலி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், ரவிகரன் கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகளைச் சுட்டிக்காட்டினார். மகாவலி அதிகாரசபை என்பது தமிழர்களின் பூர்வீகக் காணிகளைப்பறித்து பெரும்பான்மை யினத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு கட்டமைப்பாகவே செயற்படுவதாக சாடினார். இந்தத் திட்டத்தினால் வவுனியா வடக்கில் உள்ள […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பழம்பெரும் சைவத்தமிழ் கிராமம் காரைதீவு..!

  • Feb 18, 2026 - 09:52 AM
  • 0 Comments

ஈழத்தின் கிழக்கே உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியால் இது மிகவும் பாதிக்கப்பட்டது. சுமார் 2000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. காரைதீவு என்னும் ஊரின் பெயர் இலங்கையின் வேறு சில இடங்களிலும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் காரைதீவு காரைநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு காரைதீவு புத்தளம் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

IMF பிரதானி இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு..!

  • Feb 18, 2026 - 09:48 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17.02.2026) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும், இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவையும் ஒட்டியே இந்த விஜயம் அமைந்தது. மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, கலாநிதி ஜோர்ஜீயேவா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல இடங்களுக்கு பிற்பகலில் மழை..!

  • Feb 18, 2026 - 09:44 AM
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மிக கொடிய அடக்கு முறை சட்டத்தினை கொண்டு வரும் தேசிய மக்கள் சக்தி..!

  • Feb 18, 2026 - 09:40 AM
  • 0 Comments

ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் உலக நாடுகள் மற்றும் i.m.f உட்பட்ட பல சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசிடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரியும் மற்றும் இந்த அரசாங்கத்தின் தேர்தல் வாக்குரிதியின் முக்கிய அம்சமாக காணப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை அகற்றுதல் என்பதே இதனை மையப்படுத்தி இந்த அரசாங்கம் மிகப்பெரிய சட்ட மூலத்தினை வெளியிட்டு உள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இவ் சட்ட மூலம் மூலம் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகிழங்கேணி-லிகோரியார் இணைப்பு வீதி தார் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது..!

  • Feb 18, 2026 - 09:36 AM
  • 0 Comments

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் கோரிக்கையின் பயனாக மகிழங்கேணி-லிகோரியார் இணைப்பு வீதி தார் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது. தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் திரு சத்தியசோதி அவர்களிடம் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் நேரடியாக விடுத்த கோரிக்கையின் பயனாக சுமார் 300மீட்டர் நீளம் கொண்ட இணைப்பு வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. மேற்படி இணைப்பு வீதியை புனரமைப்புச் செய்ய வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் கண்ணீருக்கு பதில் நியாயமான சம்பள உயர்வே..!

  • Feb 17, 2026 - 04:07 PM
  • 0 Comments

அருட்கலாநிதி. யா. றமேஸ் அ.ம.தி ஒரு நாட்டின் எதிர்காலம் எங்கே உருவாகிறது? பலர் அது பல்கலைக்கழகங்களில், தொழில்நுட்ப ஆய்வகங்களில் அல்லது அரசியல் மேடைகளில் உருவாகிறது என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு நாட்டின் எதிர்காலம் அமைதியாக, சின்னச் சின்ன மேசைகளும் வண்ணக் கதிரைகளும் நிறைந்த முன்பள்ளி வகுப்பறையில்தான் உருவாகத் தொடங்குகிறது. அங்கேயே ஒரு குழந்தையின் முதல் எழுத்து, முதல் பாடல், முதல் ஒழுக்கம், முதல் சமூக அனுபவம் அனைத்தும் வடிவம் பெறுகின்றன. அந்த அடித்தளத்தை அமைக்கும் முன்பள்ளி […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தயாசிறியின் கட்சி உறுப்புரிமைக்கு ஆப்பு..!

  • Feb 17, 2026 - 01:54 PM
  • 0 Comments

நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தயாசிறி ஜயசேகர பணியாற்றுவதற்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp