செய்திகள்

பெற்றோல் 5 ரூபாவினால் குறைப்பு டீசல் 3 ரூபாவினால் அதிகரிப்பு

  • Nov 1, 2024 - 07:45 AM
  • 0 Comments

சினோபெக் நிறுவனம் 01-11-2024 முதல்; அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ளது இதன்படிஇ ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 371.00 ரூபாவாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 313.00 ரூபாவாகும். அத்துடன் 280 ஆக இருந்த ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283.00 ஆக உயர்ந்துள்ளது 92 […]

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (31-10-2024)

  • Oct 31, 2024 - 11:41 AM
  • 0 Comments

மேஷம்-உறுதி ரிஷபம்-நன்மை மிதுனம்-தெளிவு கடகம்-பக்தி சிம்மம்-லாபம் கன்னி-நிம்மதி துலாம்- மதிப்பு விருச்சிகம்-இன்பம் தனுசு- நற்செயல் மகரம்-இன்பம் கும்பம்-உற்சாகம் மீனம்-உதவி

இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

  • Oct 31, 2024 - 11:33 AM
  • 0 Comments

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என வியாபாரம் நடைபெறுகின்றது சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை காலையிலேயே விற்பனை ஆரம்பமாகியுள்ளது

செய்திகள்

அநுரவின் அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை! ஜனாதிபதி அறிவிப்பு

  • Oct 31, 2024 - 11:19 AM
  • 0 Comments

கிராமங்களின் வறுமை நிலையினை ஒழிப்பதே திசைக்காட்டி அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு சேவை செய்வதற்கு மக்களுடனேயே அமைச்சர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளாhர் ஆகவே எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகளை அரசாங்கம் வழங்கமாட்டாதென ஜனாதிபதி அறிவித்துள்ளாhர்

செய்திகள்

வவுனியா மஸ்தான் கீழ்த்தரமானவர் – ரிஷாட் குற்றச்சாட்டு

  • Oct 31, 2024 - 09:24 AM
  • 0 Comments

அரசியல் இலாபத்திற்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கூட தடைசெய்யும் வக்கிர புத்தியுடையவர் முன்னாள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் என வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளாhர் மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு உரையாற்றியயுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. வெல்ல முடியாது என தெரிந்து அவர்கள் நாகரீகமாக் ஒதுங்கியுள்ளனர். தோற்பது நிட்ச்சயம் என தெரிந்தும் மீறி போட்டியிடும் மஸ்தான் […]

செய்திகள்

ஜே.வி.பி அரசு இனவாதிகள்- தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு

  • Oct 30, 2024 - 09:10 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி இனவாதப்போக்கை உடையவர்கள் என்பது தமிழ் மக்கள் நன்கு தெரியுமென தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாடு சிங்கள மக்களை கண்திறக்கச் செய்யுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது நேற்று (29) இதுபற்றி அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவிக்கையில் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார் புதிய […]

செய்திகள்

டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது

  • Oct 30, 2024 - 08:49 PM
  • 0 Comments

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறுக்கு மன்னார் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இன்று நடைபெற்ற (30) வழக்கு விசாரணையின் போது; நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையிலேயே நிதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பிதது உத்தரவுட்டுள்ளது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கணவனும் மனைவியும் அடித்து கொலை

  • Oct 30, 2024 - 04:56 PM
  • 0 Comments

  யாழ்ப்பாணம் கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், […]

செய்திகள்

திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும்-ச.குகதாசன்.

  • Oct 30, 2024 - 12:33 PM
  • 0 Comments

திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் சங்குடன் இணைந்து போட்டியிடுவதாக சமஸ்டி தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை தம்பலகாமம் பிரதேச மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு, கிழக்கில் திருகோணமலையில் மாத்திரமே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp