உள்ளூர்

மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் – பொன் சுதன்!

  • Nov 17, 2024 - 10:56 AM
  • 0 Comments

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் மாவீரர் துயிலும் இல்லங்களை மாவீரர் தினத்திற்கு முன்பு விடுவிக்க வேண்டுமென யாழ் தேர்தல் மாவட்டத்தில் பொது தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்ற பொன் சுதன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாவீரர்களின் பெற்றோர்கள் கூட ஜனாதிபதி அநுரகுமாரவின் வாக்குறுதிகளை நம்பி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள். அநுர வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் […]

உள்ளூர்

டொக்டர் அர்ச்சுனாவுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

  • Nov 17, 2024 - 10:36 AM
  • 0 Comments

2024 பொதுத் தேர்தலில் சுயேட்சையாக ஊசி சின்னத்தில் வென்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நேற்று (16) வைத்தியர் அர்ச்சுனா பிற்பகல் அவரது தொகுதியான சாவகச்சேரி சென்றிருந்த போதே மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர்.  

செய்திகள்

ஜனாதிபதி அநுர தமிழ் மக்களை ஏமாற்ற மாட்டார்- சந்திரசேகரன்

  • Nov 17, 2024 - 10:22 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நிட்சம் நிறைவேற்றப்படும் தேசிய மக்கள் சக்தி, வடகிழக்கில் பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கு வெற்றி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணிலும் ; சஜித்தும் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆகவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் […]

செய்திகள்

அநுர தலைமையிலான அரசை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் – எரிக்சொல்ஹெய்ம்

  • Nov 16, 2024 - 11:42 AM
  • 0 Comments

அநுர அரசுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியானது ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவில் அவர் இலங்கை தொடர்பில் சில விடயங்களை வெளியிட்டுள்ளார் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். இது இலங்கைக்கு வலுவான புதிய ஆட்சியை மக்கள் விரும்புகின்றார் என்பதனை காட்டுகின்றது புதிய அரசு செய்ய வேண்டியது 1. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் […]

செய்திகள்

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்- வி.எஸ்.சிவகரன்.

  • Nov 16, 2024 - 10:18 AM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று சனிக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆடசியாளர்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பை தொடர்ச்சியாக மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சிங்கள பேரினவாதம் அவ்வாறு செயற்படுகின்ற Nபுhது தமிழர் தரப்பு பிரிந்து நின்று அதனை […]

செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

  • Nov 16, 2024 - 10:02 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாக வெற்றிப் பெற்றதையடுத்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார். பொதுத்தேர்தல் வெற்றியையும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஜனாதிபதி, வலியுறுத்தியுள்ளார் எந்த வகையான வெற்றியையும் அமைதியாக கொண்டாடும் கலாசாரம் நாட்டு மக்களிடம் வளர்க்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை வென்றுள்ள நிலையில் மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என […]

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • Nov 16, 2024 - 08:20 AM
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

  • Nov 15, 2024 - 05:26 PM
  • 0 Comments

கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றதையடுத்து அந்த கட்சிக்கு மொத்தமாக 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியப் பட்டியல் ஊடாக 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்தக் கூட்டணிக்கு 40 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மொத்தமாக 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான […]

செய்திகள்

தேர்தல் மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

  • Nov 15, 2024 - 05:08 PM
  • 0 Comments

கண்டி தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள் 1 லால் காந்தா -316,951 2 ஜகத் மனுவர்ண -128,678 3 மஞ்சுள பிரசன்ன -94,242 4 முடித விஜேமுனி -82,926 5 ஹர்ஷன திஸாநாயக்க – 78,526 6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929 7 ரியாஸ் மொஹமட்-64,043 8 துஷாரி ஜயசிங்க -58,223 9 மொஹமட் பாஸ்மின் -57,716 ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனம் 1 ரவூப் ஹக்கீம் -30,883 2 சமிந்திரனி […]

செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comments

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp