உள்ளூர் செய்திகள்

சிறீதரன் எம்.பி. கிளிநொச்சி அரச அதிபருடன் சந்திப்பு…!

  • Dec 2, 2024 - 07:25 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று(01.12.2024) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள […]

உள்ளூர் செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

  • Dec 2, 2024 - 07:12 AM
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் – புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததது. ஃபெங்கல் புயல் காரணமாக இந்தியாவின் […]

உள்ளூர் செய்திகள்

தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆய்வு

  • Dec 2, 2024 - 04:40 AM
  • 0 Comments

சாவகச்சேரியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்றைய தினம் (01.12.2024) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். சாவகச்சேரியில் அமைந்துள்ள பாதுகாப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபர் சென்று அங்குள்ள மக்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை கேட்றிந்து கொண்டார். மேலும் […]

உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

  • Dec 2, 2024 - 04:18 AM
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பரிந்துரைகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையை அறிவுறுத்தியிருந்தது. பின்னர் மேலும் இரண்டு வாரகால அவகாசத்தை […]

உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]

உள்ளூர் செய்திகள்

குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு ஆளுநர் உறுதி.

  • Dec 1, 2024 - 08:25 PM
  • 0 Comments

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விவசாயம் மற்றும் கடற்றொழில் வட மாகாணத்தின் முக்கியமான தூண்கள்.   இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் […]

விளையாட்டு

சாருஜன் சண்முகநாதன் மீண்டும் அசத்தல்!

  • Dec 1, 2024 - 07:08 PM
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி இன்று சாஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக சாருஜன் சண்முகநாதன் 102 ஒட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கஸன்பார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் […]

உள்ளூர்

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தின கொண்டாட்டம் – பொலிஸார் விசாரணை ஆரம்பம்

  • Dec 1, 2024 - 06:58 PM
  • 1 Comment

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் கடந்த 26 ம் திகதி நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாடியவர்கள் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது. அத்துடன் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது அங்கு வந்திருந்த […]

விளையாட்டு

நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வெறும் 12.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Dec 1, 2024 - 12:49 PM
  • 0 Comments

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் 100 ஓட்டங்களை அதிவேகமாக துரத்தி அடித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 499 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹாரி புரூக் 171 ஓட்டங்கள எடுத்தார். பின்னர் 151 […]

இந்தியா செய்திகள்

விழுப்புரத்தில் 42 ஆண்டுகளுக்கு பின் அடித்து கொட்டிய கன மழை

  • Dec 1, 2024 - 12:35 PM
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்ததால் அங்குள்ள தென் ஏரி உடைந்ததையடுத்து அதனையண்டிய அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp