உலகம் செய்திகள்

துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலி

  • Dec 25, 2024 - 03:08 AM
  • 0 Comments

துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியில், பாலிகேசிர் மாகாணத்தில், வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் இடிந்து தரைமட்டமாகின. அருகில் உள்ள கட்டங்களும் சேதம் அடைந்தள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த […]

உலகம் செய்திகள்

ரஷியாவுக்கு மேலும் வீரா்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா

  • Dec 25, 2024 - 03:02 AM
  • 0 Comments

ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகிவருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு முப்படைகளின் கூட்டு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரஷியாவுக்கு கூடுதலாக சிறப்புப் படை வீரா்களை அனுப்புவதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக, இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு விநியோகிக்க வட கொரியா ஆயத்தமாகிவருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்திகள்

மத்திய பட்ஜெட் :பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

  • Dec 25, 2024 - 02:57 AM
  • 0 Comments

இந்தியாவின் வரவு செலவு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பாதீடு; அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பாதீட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பாதீடு தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் […]

இந்தியா செய்திகள்

டெல்லியில் காய்கறி சந்தைக்கு சென்று விலைவாசி குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

  • Dec 25, 2024 - 02:41 AM
  • 0 Comments

டெல்லி மரக்கறி சந்தையில் விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்துக் கொண்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார். அதன்படி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களின் குறைகளை […]

உள்ளூர் செய்திகள்

மஹிந்தவுக்கும், நாமலுக்கும் உயிரச்சுறுத்தல்?

  • Dec 25, 2024 - 02:28 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும், நாமலுக்கும் உயிரச்சுறுத்தல் உள்ள நிலையில் அரசியல் பழிவாங்களுக்காகவே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந் நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு அரசியல் பழிவாங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் […]

உள்ளூர் செய்திகள்

சட்டவாட்சி பலமடைந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- சிறிநேசன் எம்.பி

  • Dec 25, 2024 - 02:14 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள நிலையில் அதனை நடைமுறைபடுத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். […]

உள்ளூர் செய்திகள்

யாழ். தென்மராட்சியில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்

  • Dec 25, 2024 - 02:05 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பார்வையிட்டார். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை – கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதி மற்றும் விளை நிலங்களில் அண்மைக் காலமாக சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்றுவருகிறது. இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை […]

உள்ளூர் செய்திகள்

தமிழக மீனவர்கள் 17 பேருக்கும் விளக்கமறியல்!

  • Dec 25, 2024 - 01:49 AM
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த மீனவர்களை இன்று நண்பகல் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்>இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா https://www.youtube.com/shorts/_ufGT4fPF9o?feature=share

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • Dec 25, 2024 - 01:44 AM
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

கனடா செய்திகள்

பிரம்டனில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் கைது!

  • Dec 25, 2024 - 01:34 AM
  • 0 Comments

பிரம்டன் பகுதியில் மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இதையும் படியுங்கள்>கனடாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம்! https://www.youtube.com/@pathivunews

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp