உலகம்

அமெரிக்காவில் வாகன தாக்குதல் 10 பேர் பலி 30 பேர் காயம்

  • Jan 1, 2025 - 09:42 PM
  • 0 Comments

நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே கார் மக்கள் கூட்டத்தில் புகுந்தது. சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, […]

உலகம்

தைவானை சீனாவுடன் இணைப்பதை யாரும் தடுக்க முடியாது- சீன ஜனாதிபதி

  • Jan 1, 2025 - 09:34 PM
  • 0 Comments

சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடன் பல்வேறு நாடுகள் தங்களது தொடர்பை வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

விளையாட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் சாதனை

  • Jan 1, 2025 - 09:27 PM
  • 0 Comments

ஆண்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி தரவரிசை வரலாற்றில் அதிக தரவரிசை பெற்ற இந்திய டெஸ்ட் பந்து வீச்சாளராக புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் 904 புள்ளிகளே சாதனையாக இருந்தது. இதனை பும்ரா (907) முறியடித்துள 907 புள்ளிகள் பெற்றுள்ளார் 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணித் தலைவர் கம்மின்ஸ் உள்ளார். பாக்ஸிங் டே டெஸ்டில் […]

செய்திகள்

வடக்கின் வர்த்தகர்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தியுள்ளனர்

  • Jan 1, 2025 - 09:17 PM
  • 0 Comments

வடமாகாணத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளனர் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார் 2024 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்த்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார். குறிப்பாக வடமாகாணத்தில் […]

செய்திகள்

புலம்பெயர் உறவுகள் எம் நாட்டைக்கட்டி எழுப்புவர்- செல்வம் எம்பி

  • Jan 1, 2025 - 09:09 PM
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை […]

செய்திகள்

திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக எழுந்த மக்கள்

  • Jan 1, 2025 - 08:59 PM
  • 0 Comments

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ‘புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே ‘தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு தொல்லை தராதே’ ‘தொல்பொருள் […]

செய்திகள்

பொதுமக்களை கொல்லவிரும்பவில்லையாம் – சவேந்திர சில்வா

  • Jan 1, 2025 - 01:01 PM
  • 0 Comments

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என ஓய்வு பெற்ற இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் 2022 அரகலய உட்பட தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஆபத்து ஏற்பட்டால் தேசத்தை பாதுகாப்பதற்காக தயாராகயிருக்கும் உத்தியோகபூர்வ இராணுவமே தேசத்தின் இராணுவம் என அவர் தெரிவித்துள்ளார். ஆவர் மேலும் தெரிவிக்கையில் 2022 எழுச்சி ஒரு உள்நாட்டு […]

செய்திகள்

இங்கிலாந்து செல்ல முற்பட்ட தமிழர் கட்டுநாயக்காவில்கைது கைது!

  • Jan 1, 2025 - 12:19 PM
  • 0 Comments

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சந்தேக நபர் நேபாளத்திற்குச் செல்லும் இந்திய விமான சேவையில் பயணிப்பதற்காக நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தார், ஆனால் குடிவரவு கருமபீடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். குடிவரவு கருமபீட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை […]

செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

  • Jan 1, 2025 - 11:36 AM
  • 0 Comments

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறுகின்றதென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய வருடத்தில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட […]

கனடா

வின்ட்ஸோர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

  • Jan 1, 2025 - 04:15 AM
  • 0 Comments

71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வின்ட்ஸோர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சமப்வம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>கனேடிய […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp