உள்ளூர் செய்திகள்

முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

  • Jan 4, 2025 - 12:00 AM
  • 0 Comments

முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் (03.01.2025) காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது 14 ஆசிரியர்களுக்கு […]

உள்ளூர் செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

  • Jan 3, 2025 - 11:39 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் நெறியாழ்கையின் கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது. இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், குறைபாடுகள், மக்கள் […]

உள்ளூர் செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு!

  • Jan 3, 2025 - 11:28 PM
  • 0 Comments

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டதின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய,மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது போலீஸ் அதிகாரிகள், போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்தியிடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையும் படியுங்கள்>கொலை குற்ற சந்தேகத்தில் வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல் https://www.youtube.com/@pathivunews/videos

நினைவஞ்சலி

31ஆம் நாள் நினைவஞ்சலி!

  • Jan 3, 2025 - 10:53 PM
  • 0 Comments

அன்புடையீர்! 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதமடைந்த எமது குடும்ப விளக்கு                                 அமரர். எலியஸ் அப்புகாமி அலிஸ்னோனா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 07.01.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அத்தருணம் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தகவல் -லோகநாதன் பார்வதி குடும்பம்,காரைதீவு https://pathivunews.com/ https://www.youtube.com/@pathivunews/videos

செய்திகள்

கொலை குற்ற சந்தேகத்தில் வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல்

  • Jan 3, 2025 - 07:22 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால் கொலை குற்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) உத்தரவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ம் திகதி முன்னாள் இராஜாங்க […]

செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comments

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந் நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (02) உயிரிழந்தார். குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. குடும்பத் தலைவரும் மற்றொரு மகனும் தொடர்ந்தும் சிகிச்சை […]

செய்திகள்

பொலிஸாரின் அனுமதியுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் தொடர்கின்றது

  • Jan 3, 2025 - 06:56 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் ஒலிபெருக்கி அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த கையெழுத்துப் போராட்டம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் மட்டும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர் இதனைத் தொடர்ந்து […]

செய்திகள்

கடந்த அரசாங்கம் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தியது என கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பு

  • Jan 3, 2025 - 05:34 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் பயப்படப் போவதில்லையென யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார். எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட உள்ளதாக தெரிவித்த அவர் எமது வளங்களை பாதுகாக்க எந்த விலையும் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார். ;யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற […]

செய்திகள்

வந்தார் சொன்னார் சென்றார் மகிந்த புத்தா யோஷித, சீ.ஐ.டீ யிருந்து வெளியேறினார்

  • Jan 3, 2025 - 03:56 PM
  • 0 Comments

பிழையை சரியாய் செய்யும் இராஜபக்ஸக்களின் ஆணியை பிடுங்க முடியாது தவிக்கும் ஜேவிபி அரசாங்கம் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார் இரண்டு மணித்தியாலங்களின் பின் சொகுசு வாகனத்தில் மெய் பாதுகாவலர்களின் பாதுகாப்போடு மீள […]

செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு எச்சரிக்கை

  • Jan 3, 2025 - 03:34 PM
  • 0 Comments

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp