உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

  • Mar 25, 2026 - 09:46 AM
  • 0 Comments

ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மற்றும் தனியார் கல்வி. நிலையங்களின் உரிமையாளர்களை இணைத்து மாணவர்களின் சிகையலங்காரம் மற்றும் தனியார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசசபை கூட்ட மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (24.03.2026) இடம்பெற்றிருந்தது. ஆலையடிவேம்பு பிரதேசசபைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகையலங்காரம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி..!

  • Mar 24, 2026 - 12:36 PM
  • 0 Comments

மேல் மாகாண வடக்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொலிஸ் வைத்திய சேவைப் பிரிவுக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் இடம்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்..!

  • Mar 24, 2026 - 12:33 PM
  • 0 Comments

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24.03.2026) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செயலாளர்களுடன் கலந்துரையாடிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்..!

  • Mar 24, 2026 - 12:26 PM
  • 0 Comments

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.03.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலி தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி..!

  • Mar 24, 2026 - 12:20 PM
  • 0 Comments

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையே சரமாரி வாள்வெட்டு..!

  • Mar 24, 2026 - 12:15 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23.03.2026) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று(23.03.2026) இரவு 9.00 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது பொலிஸார் தாக்குதல்..!

  • Mar 24, 2026 - 10:58 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்று , அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா சென்ற குழு ஒன்றுடன் தர்க்கப்பட்டு , இரு குழுக்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறீதரன் எம்.பி…!

  • Mar 24, 2026 - 10:43 AM
  • 0 Comments

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார் DR பசுபதி அச்சுதன்..!

  • Mar 24, 2026 - 10:13 AM
  • 0 Comments

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக நேற்றைய தினம் திங்கட்கிழமை( 23.03.2026)வைத்தியர் பசுபதி அச்சுதன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை, ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர் கைது..!

  • Mar 24, 2026 - 09:39 AM
  • 0 Comments

அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp