உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“என் மகனின் உயிரைக் காப்பாற்றுங்கள்…” – சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயாரின் கண்ணீர்மிகு வேண்டுகோள்!

save anojans life saudi death sentence | Pathivu News
சவுதியில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுமாறு, அவரது தாயார் சவுதி அரபியே அரசே எனது மகனை மன்னியுங்க்ள் என சவுதி அரசாங்கத்திடமும், நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடமும், மனிதநேயமிக்க சர்வதேச அமைப்புகளிடமும் கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“எனது மகன் என் கண்முன்னே வளர்ந்தவன். இன்று அவனுக்கு மரண தண்டனை என்ற செய்தியை கேட்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு தாயாக நான் உயிருடன் மரணத்தை அனுபவிக்கிறேன். என் மகனை என்னிடமிருந்து பறித்துவிடாதீர்கள். அவனுக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்குங்கள்…” என அவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார்.
“என் மகனுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும். அவன் மீண்டும் தனது தாயின் குரலைக் கேட்க வேண்டும். அவனை உயிருடன் மீண்டும் காண வேண்டும் என்பதுதான் ஒரு தாயாக எனது ஒரே ஆசை. அவனுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்…” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான மனிதநேய அடிப்படையிலான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு சவுதி அரசாங்கம், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச மனிதநேய அமைப்புகளிடம் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊