அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 22.04.2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் உப தலைவர் சைவப் புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தீட்சா குருவாக சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வானது சைவ சமயப் பிரசாரச் செயலாளர் சைவப் புலவர் வே. மகேஸ்வரரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவதீட்சையைத் தொடர்ந்து சான்றிதழ், நித்திய அனுஷ்டான விதிப் புத்தகங்கள் வழங்கப்படுவதோடு பயிற்சிகளும் அளிக்கப்படும் எனவும் ,
7 வயதிற்கு மேற்பட்டோர் இந்த சிவதீட்சை நிகழ்வில் பங்குபெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீட்சை பெற வரும்போது ஆண், பெண் இருபாலாரும் சைவ கலாசார உடையுடன் செம்புத் தாம்பாளம், பூக்கள் மற்றும் குருதட்சணை ஆகியவற்றுடன் வருமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
