உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு..!

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 22.04.2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் உப தலைவர் ​சைவப் புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தீட்சா குருவாக சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வானது சைவ சமயப் பிரசாரச் செயலாளர் சைவப் புலவர் வே. மகேஸ்வரரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
​ சிவதீட்சையைத் தொடர்ந்து சான்றிதழ், நித்திய அனுஷ்டான விதிப் புத்தகங்கள் வழங்கப்படுவதோடு பயிற்சிகளும் அளிக்கப்படும் எனவும் ,
​7 வயதிற்கு மேற்பட்டோர் இந்த சிவதீட்சை நிகழ்வில் பங்குபெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​தீட்சை பெற வரும்போது ஆண், பெண் இருபாலாரும் சைவ கலாசார உடையுடன் செம்புத் தாம்பாளம், பூக்கள் மற்றும் குருதட்சணை ஆகியவற்றுடன் வருமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp