ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்காரணமாக பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து பாராளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
