உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மறைந்த ஊடகவியலாளர் ஏ. எல். எம். சலீம் நினைவாக நிந்தவூரில் வீதிக்கு பெயரிட கோரிக்கை..!

மறைந்த சிறந்த ஊடகவியலாளர் “கலாபூசணம்” ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவாக நிந்தவூரில் ஒரு வீதிக்கு அவரது பெயரை சூட்டுமாறு கோரி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
இம்மகஜர் மூலம், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கிய ஏ.எல்.எம். சலீம் அவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரின் பெயரை நிலைநிறுத்துவது அவசியம் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மேலும், அவரது ஊடகச் சேவைகள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய பணிகள் மற்றும் பொதுமக்கள் நலனில் ஆற்றிய அர்ப்பணிப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியம் எனவும் குறிப்பிடப்பட்டது.
இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிருபர்
நூருல் ஹுதா உமர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்