இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள், யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (07.04.2026) இந்த ஏலம் நடத்தப்பட்டது.
இந்தியப் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன.
நீண்டகாலமாக ஏலம் விடப்படாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் பொருட்கள் அனைத்தும் அன்றைய தினம் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஏலத்தில் பெருமளவிலானோர் கலந்துகொண்டு, போட்டி விலைக் கோரல்கள் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
What’s your Reaction?
