உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..!

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசு சபையால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2021ஆம் ஆண்டில் அரசிற்குச் சொந்தமான நிலமொன்றில் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதி வழங்கி, விண்ணப்பதாரருக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் ‘ஊழல்’ செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்