உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற திறமையான மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரிய கல்வியாளர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது.

அன்னார் தமது வாழ்நாளை முழுமையாக மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்த அரிய மருத்துவ அறிஞர். இலங்கையின் மருத்துவத் துறையில் அவர் பதித்த தடங்கள் என்றும் அழியாதவை. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயிர் நம்பிக்கையை அளித்ததோடு, பல தலைமுறைகள் தழுவி நிலைக்கும் மருத்துவப் பண்பாட்டை உருவாக்கியவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அன்னாரின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாது, முழு நாட்டின் மருத்துவ சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வத்தஆலா) அவர்களின் பாவங்களை மன்னித்து, அவரின் நல்ல செயல்களை ஏற்றுக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தில் நிலையான இடம் அளிப்பானாக என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பேரிழப்பை தாங்கிக் கொள்ள அல்லாஹ் அவர்களுக்கு அளவற்ற பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவானாக.

— கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்