உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25.03.2026) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு உயர்ந்துள்ளதுடன், இது 1% அதிகரிப்பு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.3 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.10% உயர்வாகும்.

அதேவேளை, மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 டொலர்களாகக் காணப்படுகிறது. இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 14.52% வீழ்ச்சி என அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தத் தீர்மானித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் குறைந்திருந்தன.

இருப்பினும், தற்போது மத்திய கிழக்கு போர் தொடர்பான நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்