வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்தும் கண்காட்சி இன்று (25.02.2026) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு F.C . சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணப் பணிப்பாளர் (கிராம அபிவிருத்தி திணைக்களம் வடமாகாணம் ) திருமதி . பா. கஜானி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி . நிருபராஜ் லாகினி , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் திரு . பொன்னையா குகதாசன் , சாவகச்சேரி ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர் திரு. தாராளசிங்கம் பிரகாஸ் , மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S .சுனேத்திரா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .குறித்த நிகழ்வில் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் போன்ற பிரிவுகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


