உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் நியமனம் இறுதி முடிவு பெப்ரவரி 3

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஆய்வு செய்து இறுதி முடிவை பெப்ரவரி 3 ஆம் திகதி எடுக்கவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள நபரின் பெயர் ஐந்தாவது முறையாக அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் இறுதி தீர்மானம் எடுக்க அரசியலமைப்பு சபை இன்று கூடவிருந்தாலும், அந்த முடிவு அடுத்த செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

‘ஜனாதிபதி புதிய பெயரை சமர்ப்பித்துள்ளார். அதை உறுப்பினர்கள் ஆராய்வதற்கு சில காலம் தேவைப்படுகிறது.
எனவே, பாராளுமன்றம் கூடும் அதே நாளான பெப்ரவரி 3 ஆம் திகதியே இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும்,’ என அமைச்சர் பிமல் ரத்நாயக்க் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp