அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானது அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்று விசேட நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்,
தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு வழங்கப்பட்ட 48 மணி நேர அவகாசம் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
