அட்டைப் பற்றாக்குறை காரணமாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில், அச்சிடப்பட்ட இந்த அனுமதிப் பத்திர அட்டைகள் தபால் திணைக்களம் ஊடாக விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அட்டைத் தட்டுப்பாடு காரணமாக, நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் பணி இடைநிறுத்தப்பட்டு, தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
