மீனவர்கள் தங்களின் மீன் பிடிப்பின் போது உருவாகும் மீன் கழிவுப் பொருட்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கோப் குழு தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்காக, மீனவர்கள் இந்த மீன் கழிவுகளை ஒப்படைக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மீனவர் பிடித்த மீனை கொண்டு வர பயன்படுத்தப்படும் கொள்கலன்களை மீண்டும் ஒப்படைக்கத் தவறும் மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிஷாந்த சமரவீர எச்சரித்தார்.
