தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்துக்குச் சென்ற ரெயிலில் பயணம் செய்த 195 பேரில் 32 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் ஏற்பட்டது. அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
கிரேன் விழுந்த போது ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில், ரெயில் தீப்பிடித்து எரிந்தது.
மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை ஆரம்பித்தது.
பொலீசார் தெரிவித்ததாவது, பல்வேறு மருத்துவமனைகளுக்கு காயமடைந்தோர் அனுப்பப்பட்டனர், விசாரணைகள் தொடர்கின்றன.

