இன்றிரவு நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் ஓட்டோ டீசல் விலை 2 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லிட்டருக்கு 5 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 95 ஒக்டோன் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாவாலும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 2 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 92 ஒக்டோன் பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
