கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு வேலைத்தளத்தின் முன்பாக ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தாக்குதலுக்குள்ளானதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
