இலங்கை செஞ்சிலுவை சங்கம் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 28,000 குடும்பங்களுக்கு மொத்தம் 2,420 ரூபா மில்லியன் நிவாரண நிதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதில், இடம்பெயர்ந்த 20,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 85,000 ரூபா என்ற விலையில் மொத்தம் 1,620 ரூபாமில்லியன் வழங்கப்படும்.
மேலும், வாழ்வாதாரம் இழந்த 8,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100,000 ரூபா வரையில் மொத்தம் 800 ரூபா மில்லியன் வழங்கப்பட உள்ளது என்று இலங்கை nசெஞ்சிலுவை சங்க தலைவர் நவீந்திர செனாரத்ன தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த 20,000 குடும்பங்களுக்கு நிதி மூன்று கட்டங்களாக விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டிற்கு வௌ;வேறு பகுதிகளில் உள்ள குடும்பங்களில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1,505 குடும்பங்கள் உட்பட, இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
மேலும், சங்கம் 400 பாதுகாப்பு மையங்களில் கழிப்பறை வசதிகளை நிறுவ மற்றும் ரூ. 7.5 மில்லியன் மதிப்புள்ள 15,000 பாடசாலை உபகரணங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நவீந்திர செனாரத்ன தெரிவித்துள்ளார்.
