உள்ளூர் செய்திகள்

எல்டிடி முன்னாள் உறுப்பினருக்கு கனடிய குடியுரிமைக்காக ஆதரவு வழங்கியதாக கனடா பாதுகாப்பு அமைச்சர் அனந்தசங்கரி மீது குற்றச்சாட்டு

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஈழத் தமிழரான கேரி அனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கனடிய குடியுரிமை வழங்க வலியுறுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின் பேரில், செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனடிய குடியுரிமை வழங்குமாறு 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் முகமையிடம் அனந்தசங்கரி இரு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதங்களில், செல்வகுமார் கனடிய நாட்டில் பிறந்த குழந்தையின் தந்தையாவார் என்பதையும், குடும்ப பிரிவினைத் தவிர்க்கும் நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கடிதங்கள் அனந்தசங்கரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கனடா குடியுரிமை, அகதிகள் மற்றும் குடியேற்றம் அலுவலகம் (ஐசுஊஊ) செல்வகுமாரின் டுவுவுநு தொடர்புகளை மேற்கோளாக கொண்டு அவருடைய குடியுரிமை விண்ணப்பத்தை பலமுறை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை, அனந்தசங்கரியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி விரிவாக கருத்துரைப்பது உகந்ததல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp