உலகம் செய்திகள் வினோத உலகம்

ஜட்டிக்குள் பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற நம்மவர் தாய்லாந்தில் கைது

தாய்லாந்து வனவிலங்கு செயல்பாட்டுக் குழுவின் அதிகாரிகள், வனவிலங்கு கடத்தலுக்கு முயற்சித்த இலங்கை நபரொருவரை, பாங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவரது உள் உடையில் மூன்று பாம்புகள் மறைக்கப்பட்டிருந்தன.

தாய்லாந்து தேசிய பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவரவியல் பாதுகாப்புத் துறையின் வனவிலங்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள இயக்குநர் பொன்லாவீ புசாக்கியாட் இந்த தகவலை, கடந்த 3ஆம் தேதி துறைசார் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த இலங்கை நபர் ‘ஷெஹான்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரிடம் வனவிலங்கு கடத்தல் தொடர்பான முந்தைய குற்றப் பின்னணி இருப்பதற்காக, தாய்லாந்து அதிகாரிகள் முன்னதாகவே தகவல் பெற்றிருந்தனர்.
ஜூலை 1ஆம் தேதி அதிகாலை 12.06 மணிக்கு, சுவர்ணபூமி விமான நிலையம் வழியாக பாங்கொக்கிற்கு அவர் வருவார் என்ற தகவலையடுத்து அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

2024ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த ஒருகேஸில், ஷெஹான் பல விலங்குகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்த நேரத்தில், மிருகப்பள்ளி அதிகாரிகள் அவரிடமிருந்து ஓநாய்கள், மீர்காட்கள், கருப்புக் கிளிகள், சுகர் க்ளைடர்கள், முள்ளம்பன்றிகள், பால் பைதான்கள், இகுவானாக்கள், தவளைகள், சலமாண்டர்கள் மற்றும் ஆமைகள் போன்ற விலங்குகளை பறிமுதல் செய்தனர்.

இந்த முறையில், பாங்கொக்கில் குறுகிய நேரம் தங்கிய ஷெஹான், ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தை விட்டு புறப்பட திட்டமிட்டிருந்தார்.
அன்று மாலை 7 மணிக்கு தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டு, தாய் ஏர்வேஸ் விமான சேவையில் பதிவு செய்தார்.

விமான நிலையத்தில், அதிகாரிகள் அவரை எக்ஸ்-ரே இயந்திரத்தின் உதவியுடன் பரிசோதித்தனர்.
அவரது பயணப்பைகளில் எதுவும் சந்தேகத்திற்கிடமானவை காணப்படவில்லை.

ஆனால், அவருடைய உடல் பரிசோதனை செய்யபட்டபோது, அவரது உள் உடையில் மூன்று பாம்புகள் மறைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவை பிணைய பைகளில் வைத்து மறைக்கப்பட்டிருந்தது.

பிணை இல்லாமல் கைது செய்யப்பட்ட ஷெஹான் கடத்த முயன்ற மூன்று பாம்புகளும் பால் பைதான்கள் ஆகும்.

இவை ஊஐவுநுளு (ஐவெநசயெவழையெட ஊழnஎநவெழைn ழn நுனெயபெநசநன ளுpநஉநைள) ஆவணத்தில் அணுக்கூறு ஐஐயில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவை இறக்குமதி, ஏற்றுமதி செய்ய அதிகாரபூர்வ அனுமதி அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp