உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

6ம் வகுப்பு – ஆடம்பரம் அல்ல… அவசரம்!” கல்வி சீர்திருத்தம் கோரி பெற்றோர் போராட்டம்

2026 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, இன்று பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்மொழியப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கல்வி சீர்திருத்த கல்வி முறையை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த ஆண்டிலேயே கல்வி மாற்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் மேலும் தாமதங்களால் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்த பெற்றோர், அரசாங்கம் இதுகுறித்து உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்