உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

545 பாலியல் தொல்லை,38 வல்லுறவு சம்பவங்கள்.20 குழந்தைகள் உயிர் மாய்ப்பு முயற்சி

நாட்டில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதில் 8,514 முறைப்பாடுகள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பரிசீலனையில் உள்ளதாகவும், 1,941 சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறைப்பாடுகளில் 545 பாலியல் தொல்லை சம்பவங்கள், 231 கடுமையான பாலியல் தவறுகள், 38 வல்லுறவு சம்பவங்கள், 9 சிறுவர் திருமணங்கள், மற்றும் 150 இணையத் தொல்லை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், 79 பேர் கர்ப்பமாகியமை பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு 20 குழந்தைகள் உயிர் மாய்ப்பு முயற்சி மேற்கொண்டனர்.

ஏனைய முறைப்பாடுகள் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமை மற்றும் 5 வயது கீழ் குழந்தைகள் தமது பெற்றோர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்ததால் ஏற்பட்ட முறைப்பாடுகள் ஆகும்.

இந்த தரவுகள் நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் அவசியத்தை உணர்த்துகிறது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது .

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp