வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்’ என நிக்கோலஸ் மதுரோவின் சிறை பிடிப்பிற்கு பின் டிரம்ப் அறிவித்துள்ளாhர்
‘ஒரு பாதுகாப்பான அரசு அமையும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நடத்தும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாhர்
வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படைகளால் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார்.
டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

