உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வாகன உரிமையாளருக்கு நிம்மதி: மீண்டும் வருது இலக்கத்தகடு

நாட்டில் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முந்தைய கேள்வி கோரல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலக்கத் தகடுகளை அச்சிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தற்போது சுமார் 4 இலட்சம் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் அச்சிடப்படவுள்ள புதிய இலக்கத் தகடுகள் சர்வதேச தரத்திற்கு அமையத் தயாரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால், வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp