உள்ளூர்

வவுனியாவில் அரச அலுவலகங்கள் பலதும் வெள்ளத்தில் மூழ்கியது.

வவுனியாவில் பெய்து வரும் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் வவுனியா காரணமாக அரச திணைக்களங்கள்; நீரில் முழ்கிய அதேவேளை மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் வவுனியாவில்; வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் எனபன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மாகவித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் நிரம்பி பாய்வதால் வீதி போக்குவரத்தை பாதுகாப்பு கருதி பொலிஸார் தடை செய்யதனர்

அத்துடன், வவுனியாவின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் வெள்ளத்தில் முழ்கின.

இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியோடு அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, தலைமையில் உயர் அரச அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 

 

 

 

 

 

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை