உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லசந்த கொலை முதல் மகர வரை: – மர்மங்கள் விலகாதது காவல்துறையின் பிழையா?

சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்: முக்கிய வழக்குகள் தாமதமாவதற்கு காவல்துறையின் புலனாய்வுத் தோல்விகளே காரணம்
முக்கியத்துவம் வாய்ந்த பல குற்றவியல் வழக்குகளில் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குத் தாம் பொறுப்பல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிற்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் சமூக ஊடகங்களினால் தூண்டப்பட்டவை என திணைக்களத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, மகர சிறைச்சாலை கலவரம், கொஸ்கொட விசேட அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை ஆகிய மூன்று முக்கிய வழக்குகளின் முன்னேற்றத்திற்கு சட்டமா அதிபரே தடையாக இருப்பதாகத் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்தோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடமிருந்தோ ஏதேனும் அழுத்தம் உள்ளதா எனக் கேட்டபோது, சட்டமா அதிபர் ஜனாதிபதியுடன் சிறந்த தொழில்முறை உறவைப் பேணுவதாகவும், புலனாய்வு அறிக்கைகளில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் வழக்குகளைத் தொடர முடியாது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

11 கைதிகள் கொல்லப்பட்ட மகர சிறைச்சாலை கலவரம் வழக்கில், குற்றச்சாட்டுகளைத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அண்மையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை திணைக்களத்தின் முடிவு சரியானது என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நேரில் கண்ட சாட்சிகளோ அல்லது உறுதியான ஆதாரங்களோ இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் ஐந்து ஆண்டுகள் தாமதமாகவே மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp