Friday, April 18, 2025
spot_img
Homeஉள்ளூர்யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றிரவு மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றிரவு மீண்டும் ஆரம்பம்

தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய தினம் காணி உரியாளர்கள் போராட்டத்தினை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய அரசு தொடர்ச்சியாக தமக்கான நீதியினை வழங்க மறுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்விகாரையினை அகற்றி எமது காணிகளை விடுவிக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் எனவும் தங்களுடைய போராட்டம் இரண்டு வருடங்கள் கடந்தும் தமக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என தெரிவித்த போராட்டக்காரர்கள், எமது நிலத்தை மீட்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.

குறித்த தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் பூரணை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
What do you like about this page?

0 / 400