உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் நீதி கோரி முழங்கிய மக்கள் – செம்மணி புதைகுழி உட்பட பல விவகாரங்களுக்கு கவனஈர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண நகரில் இன்று சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), பட்டலந்தை வதை முகாம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மற்றும் பிற புதைகுழி விவகாரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, “அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு”, “செம்மணியில் மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து”, “அடக்குமுறைகள் இனி வேண்டாம்”, “பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு”, “அனைத்து இனங்களுக்கும் சம உரிமை வழங்கு” போன்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தினர்.

இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே உள்ளிட்டோர், சிங்களரும் தமிழரும் இணைந்து பங்கேற்றனர்.

அவர்கள் ஒற்றுமையுடன் நீதி கோரி முழங்கிய காட்சி யாழ்ப்பாண நகரின் மக்கள் மனங்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp