உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி மரணம்: இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி மரணம் சம்பந்தமான ஆரம்ப புலனாய்வு விசாரணை நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன் வெளியிட்ட தகவலின்படி, அறிக்கையில் 03 முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்:

  • சம்பவத்தின் போது மருத்துவமனையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதால், அது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  • சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரை தனியாக செயல்பட விடாமல், மற்றொரு நபரின் கண்காணிப்பில் பணியாற்றுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார், முழுமையான விசாரணை அறிக்கை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும், அதன்பின் மட்டுமே முறைமைசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி, உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி மரணமடைந்த நிலையில், உரிய முறையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை என்றார் உறவினர்கள். இதையடுத்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்