விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்காசாம்பியன் பட்டம் வென்றார்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

சபலென்கா மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய