இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில், தொழிற்சங்கங்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் எச்சரிக்கை விடுத்துள்ளன.
முறைசார் மறுசீரமைப்பின் நோக்கம் செலவுகளை குறைத்து, நிர்வாகத்தை வலுப்படுத்தி, மின்சாரத் துறையை மேலும் சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் அமைந்துள்ளது.
மொத்தம் 24 தொழிற்சங்கங்கள், பொறியியலாளாகள் மற்றும் தொழிலாளர்கள், இந்த மாற்றங்களானது வேலைவாய்ப்பு மற்றும் நிறுவன ஒத்துழைப்பை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
அரசு, மின்சார சேவைகள் இடையூறு இல்லாமல் செயல்படுமாறு அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்துள்ளது.
இது, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நடைபெறும் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதி என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
