உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலைக்காக நீதி கோரிய மாநகரசபையின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகர சபையின் மூன்றாவது மாதாந்த அமர்வு நேற்று (21-08) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமர்வில், 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலைக்காக நீதி கோரி, அப்போதைய இராணுவ முகாம் அமைந்த இடம் புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனும் பிரேரணை முன்வைக்கப்பட்டு, சபையினரின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி முன்வைத்த இந்த பிரேரணையில், 186 பொதுமக்கள் – சிறியோர் முதல் முதியோர் வரை – இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுட்டும் வெட்டியும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

படுகொலையின் பின்னர் நியமிக்கப்பட்ட நீதியரசர் பாலகிட்ணன் தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டிருந்தபோதும், இதுவரை எந்தவித நீதி வழங்கப்படவில்லை என வலியுறுத்தப்பட்டது.

35 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நடைபெறும் போதெல்லாம் உறவினர்கள் பொலிஸ் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் எனவும், தற்போது செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதுபோல் சத்துருக்கொண்டானிலும் புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனவும் பிரேரணையில் கோரப்பட்டது.

பிரேரணைக்கு முழு சபையினரின் ஆதரவு கிடைத்ததையடுத்து, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மாநகர சபையில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp