முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோசித்த ராஜபக்ஸவை எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற சொத்து சேகரிப்பு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு யோசித்த ராஜபக்ஸவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
