மிஸ் இன்டர்கொண்டினென்டல் 2025 உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நேற்று (29) எகிப்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மிஸ் இன்டர்கொண்டினென்டல் இலங்கை ஹன்சனா பலசூரியா சிறப்பு விருதொன்றை வென்று கவனம் ஈர்த்தார்.
அவருக்கு “Strength and Harmony” எனப்படும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது. பாடல் பாடும் திறமை, ஓவியக்கலை திறன் மற்றும் கராத்தே விளையாட்டில் மூன்று முறை கருப்பு பட்டம் பெற்றுள்ள சாதனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றி மூலம், மிஸ் இன்டர்கொண்டினென்டல் மேடையில் இலங்கை பெற்றுள்ள மூன்றாவது சிறப்பு பட்டமாக இது பதிவாகியுள்ளது. இதன் மூலம் சர்வதேச அழகிப் போட்டிகளில் இலங்கையின் முன்னிலை மற்றும் தாக்கம் அதிகரித்து வருவதை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது.
