நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப் பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஜிகாவா மாநிலத்துக்குட்பட்ட அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு யோப் மாநில கார்பிக்கு செல்லும் போது திடீரென கவிழ்ந்தது.
படகில் மொத்தம் 52 பேர் பயணம் செய்தனர். இதில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவசரநிலை அதிகாரிகள் தெரிவித்ததாவது, படகு லீக்கேஜ் காரணமாக மூழ்கியுள்ளதாகவும், படகில் உயிர் பிழைத்த ஓட்டுனர் மீது கவனக்குறைவுக்கான வழக்கு தொடரப்படவுள்ளதாயும் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடுப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

