தேசிய சிறுநீரக சிகிச்சை, டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணியாற்றும் துணை இயக்குநர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசின் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் அறிவித்துள்ள இந்த வேலைநிறுத்தம், நாளை காலை 8 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 8 மணி வரை நடைபெறும் என தெரியவருகின்றது.
இந்த காலப்பகுதியில் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அஞ்ஜியோகிராம், மேமோகிராம் உள்ளிட்ட அனைத்து கதிரியக்க பரிசோதனை சேவைகளும் முற்றாக இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
